July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும்’; கீதா குமாரசிங்க சபையில் கோரிக்கை

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டுமென ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான 2ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, ரஞ்சன் ராமநாயக்க என்பவர் எம்மை போன்ற ஒரு கலைஞர் என்ற ரீதியில் அவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பை வழங்க வேண்டுமென  இதன் போது கேட்டுக்கொண்டார்.

ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் நான்கு வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பொது மன்னிப்பை வழங்க வேண்டுமென பல தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையிலேயே கீதா குமாரசிங்க எம்.பி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.