October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிவாயு விலை குறைப்பு குறித்து அரசாங்கம் தீர்மானிக்கவில்லை; பந்துல குணவர்தன

எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் அரசாங்கம் எந்த தீர்மானத்தையும் இதுவரை எடுக்கவில்லையென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

’12 கிலோ நிறைகொண்ட எரிவாயு சிலிண்டர் ஒன்று தற்போது 9.5 கிலோவாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்காக 100 ரூபா விலை குறைப்பை போலியாக செய்துவிட்டு உண்மையாக 250 ரூபாவை அதிகரித்துள்ளனர். இந்த விலை சூத்திரம் தொடர்பில் அரசாங்கம் விளக்கப்படுத்த வேண்டும். 4 சிலிண்டர்களில் செய்த பணியை தற்போது 5 சிலிண்டர்களில் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

எரிவாயு சிலிண்டர்களின் நிறையை குறைப்பதும் அதன் விலையை குறைப்பதும் நான் அல்ல. இலங்கையில் எரிவாயு உற்பத்தி செய்யும் இரண்டு தரப்பினர் உள்ளனர். அரசு மற்றும் தனியார் தரப்பினர் எரிவாயு உற்பத்தியை செய்கின்றனர். இந்தச் செயற்பாட்டை முன்னெடுப்பது நுகர்வோர் அதிகாரசபையும் உரிய அமைச்சருமாகும்.

எரிவாயு என்பது மக்கள் பயன்படுத்தும் பொருளாகும். குறித்த அதிகார சபையும் நிறுவனங்களும் இது குறித்து தீர்மானிக்கும். இங்கு ஏதும் ஊழல் – மோசடிகள் இடம்பெற்றிருந்தால் எமக்கு அறிவியுங்கள். ஆனால், எரிவாயு விலை குறைப்பு குறித்து தீர்மானிக்கவில்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.