
கொழும்பில் இன்று காலை முதல் நிலவும் கடும் மழையுடனான கால நிலையால் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால் ஆமர்வீதி, பாபர் வீதி, கிரேண்ட்பாஸ், ஹைலெவல் வீதி, தும்முலை ஆகிய பிரதேசங்களில் கடும் வாகன நெரிசல் நிலவுகின்றது.
இதேவேளை மேல், சபரகமுவ, ஊவா மற்றும் தென்மாகாணங்களில் இன்றைய தினம் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவவித்துள்ளது.