September 28, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹரின் பெர்னாண்டோ வைத்தியசாலையில் அனுமதி!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இன்று முற்பகல் கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று  தீடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் ஹரின் பெர்னாண்டோ கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரை பார்வையிட்டு நலன் விசாரிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று காலை வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சில தினங்களுக்கு முன்னர் ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் சில தகவல்களை வெளியிட்டு கருத்து வெளியிட்டிருந்த நிலையில் அது குறித்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டுமென்று ஆளும் கட்சி எம்.பிக்கள் குழுவொன்று சிஐடியில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதேவேளை ஹரின் பெர்னாண்டோவை கைது செய்வதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.