![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/04/76d72787-b85e-4f36-8d0b-9e869125cc20-e1619153424418.jpg?fit=719%2C484&ssl=1)
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி கடந்த ஜனவரி 8 ஆம் திகதி இரவு பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது.
இதனையடுத்து மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் அரசியல் பிரதிநிதிகள் கண்டனம் வெளியிட்டதோடு, பல்கலைக்கழக மாணவர்கள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
இது தொடர்பாக எழுந்த அழுத்தங்களை தொடர்ந்து இடித்தழிக்கப்பட்ட நினைவுத்தூபி மீண்டும் அதே இடத்தில் அமைப்பதற்கு முன்வந்த பல்கலைக்கழக நிர்வாகம் கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் திகதி காலை மாணவர்களுடன் இணைந்து அடிக்கல்லை நாட்டி வைத்தது.
இந்நிலையில் நினைவுத்தூபி கட்டுமானம் நிறைவுக்கு வந்த நிலையில் இன்றைய தினம் அது திறந்து வைக்கப்பட்டுள்ளது.