இலங்கையில் கொரோனா ஒழிப்பு திட்டத்திற்கு தென் கொரிய அரசாங்கத்தின் உதவியை பெற்றுக்கொள்வது தொடர்பில் சிறப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கான தென் கொரிய தூதுவருக்கும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு இடையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
கொரோனாவை ஒழிப்பதற்கு தென் கொரியா அரசு முன்னெடுத்துள்ள திட்டங்கள் குறித்து தூதர் சுகாதார அமைச்சருக்கு விளக்கமளித்ததாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனிடையே இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு பல கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது .