July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் இளம் வயதினரிடையே கொரோனா தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு’

இலங்கையில் இளம் வயதினருக்கு கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

நாட்டில் தினசரி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் தற்போதைய சூழ்நிலையில், மாறுபாட்டுக்கு உள்ளான கொரோனா தொற்று நாட்டிற்குள் பரவியுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் வார இறுதியில் வெளியிடப்படும் பரிசோதனை முடிவுகளைக் கொண்டே அதனை கூறமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.