July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘போர்ட் சிட்டி திட்டத்தின் பின்னால் செயல்படும் சக்தியை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்’

சர்ச்சைக்குரிய கொழும்பு போர்ட் சிட்டி திட்டத்தின் பின்னால் செயல்படும் சக்தியை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என சிங்கள ராவய அமைப்பின் தலைவர் வண. அக்மீமன தயாரதன தேரர் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகள், அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பொது மக்கள் துறைமுக நகரத்தின் உண்மையான விவரங்கள் குறித்து அறிந்திருக்கவில்லை.எனவே, இந்தத் திட்டம் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்,

போர்ட் சிட்டி நடவடிக்கைகளை நிர்வகிக்க ஜனாதிபதியால் ஏழு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட உள்ளது.இந்த குழுவின் உறுப்பினர்களை மாற்ற ஜனாதிபதிக்கு உரிமை உண்டு,ஆனால் ஜனாதிபதியை கேள்வி கேட்க கூட பாராளுமன்றத்திற்கு உரிமை இல்லை.

எனவே இது மாற்றப்பட்டு துறைமுக நகரத்தின் நிர்வாகம் நாடாளுமன்றத்தின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.