October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திட்டமிட்டபடி குறித்த தினத்தில் பரீட்சைகள் நடைபெறும் – கல்வி அமைச்சர்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையை ஒத்திவைக்கப் போவதில்லை என கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்ட படி உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளதுடன் புலமைப் பரிசில் பரீட்சை 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

தற்போது நாட்டில் மீண்டும் கொரோனா அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் சில பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன.

அதன்படி சுகாதார துறையினரின் உதவியுடன் பரீட்சையை நடத்த ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இம்மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 6 ஆம் திகதி வரையில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.