June 14, 2025 20:27:26

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதலை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் மத வழிபாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களின் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

கத்தோலிக்க தேவாலயங்களுக்குப் பொறுப்பானவர்களுடன் கலந்துரையாடி, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.