June 14, 2025 22:59:29

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி 23 ஆம் திகதி திறக்கப்படுகிறது

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் மீண்டும் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கடந்த ஜனவரி 8 ஆம் திகதி இடித்து அழிக்கப்பட்டது.

இதனையடுத்து எழுந்த மக்கள் எழுச்சியாலும் மாணவர்களின் போராட்டங்களினாலும் மீண்டும் இருந்த இடத்திலேயே முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அமைக்க பல்கலைக்கழக நிர்வாகம் இணக்கம் தெரிவித்ததுடன், பல்கலைக்கழக துணைவேந்தரினால் அடிக்கல்லும் நட்டு வைக்கப்பட்டது.

இந்நிலையில்,முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எனக் குறிப்பிடப்பட்ட பதாகை காட்சிப்படுத்தப்பட்டு நினைவுத் தூபியை மீள அமைக்கும் பணிகள் மாணவர்களின் பங்களிப்புடன் கடந்த ஜனவரி 15 ஆம் திகதி ஆரம்பமானது என்பது குறிப்பிடத்தக்கது.