July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தங்கள் அரசியல் இலக்குகளை அடைய ஈஸ்டர் தாக்குதலை பயன்படுத்திக் கொண்டார்கள்’: பேராயர் மெல்கம் ரஞ்சித்

‘தங்கள் அரசியல் இலக்குகளை அடைய ஈஸ்டர் தாக்குதலை பயன்படுத்திக் கொண்டார்கள்’ என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொழும்பு,மாதம்பிட்டியவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகள் மதத்தை தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாகவும் இதனை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தமது இலக்குகளை அடைய ஈஸ்டர் தாக்குதலை பயன்படுத்திக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனைகளின் போது கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.