October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திருகோணமலை பரவிபாஞ்சான் குளத்தில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழப்பு!

File photo

திருகோணமலை, தம்பலகாமம்  பரவிபாஞ்சான் குளத்திற்கு குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முள்ளிப்பொத்தானை – ஈச்சநகர் பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சுஹைல் சக்தி  மற்றும் முள்ளிப்பொத்தானை- 95 ஐ சேர்ந்த 13 வயதுடைய அலிப்தீன் அஸ்கார் ஆகிய சிறுவர்களே உயிரிழந்துள்ளனர்.

நண்பர்களுடன் சேர்ந்து குளத்தில் குளித்துக்கொண்டிருந்த போது குறித்த இரண்டு சிறுவர்களும் நீரில் மூழ்கிய நிலையில் பிரதேசவாசிகளினால் மீட்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இரண்டு சிறுவர்களும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.

உயிரிழந்த சிறுவர்களின் உடல்கள் கந்தளாய் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.