June 15, 2025 16:31:25

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விஜயதாச ராஜபக்ஷவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முடிவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒரு அமைப்பை கொண்டுள்ளது என்றும் அந்த அமைப்பு குறித்த விடயத்தை கையாளும் என்றும் அமைச்சரவை பேச்சாளர் கெஹெலியா ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அரசாங்கத்தையும், ஜனாதிபதியையும் விஜயதாச ராஜபக்ஷ விமர்சனம் செய்த காரணத்தினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

விஜயதாச விஜயதாச ராஜபக்சவின் அரசியல் வரலாறு மற்றும் அவருடைய நடத்தை பற்றி பொதுமக்கள் நன்கு அறிவர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தம்மை கடுந்தொனியில் இழிவாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு திட்டியதாக விஜயதாச ராஜபக்ஷ குற்றம் சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.