
ஐக்கிய தேசியக் கட்சியின் ஒருமித்த தீர்மானத்துடன் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றம் நுழையத் தயாராக இருப்பதாக கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
காலி பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்துக்கு உறுப்பினர் ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்படாத நிலை தொடர்கின்றது.
அடுத்த மாதம் அளவில் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தேசிய பட்டியல் ஆசனத்தைப் பொறுப்பேற்கவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றம் செல்வதற்கு கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் விரும்பம் தெரிவித்துள்ளனர் .
இதனிடையே, தேசிய பட்டியல் ஊடாக தான் பாராளுமன்றம் செல்லவுள்ளதாக வெளியான செய்தியை மறுத்துள்ள ரணில் விக்ரமசிங்க, இளம் உறுப்பினர் ஒருவரே கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.