October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புத்தாண்டு தின வாகன விபத்துக்களில் 10 பேர் பலி!

File Photo

இலங்கையில் நேற்றைய தினத்தில் இடம்பெற்ற பல்வேறு வாகன விபத்துகளில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடு பூராகவும் 121 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அவற்றில் அதிகமானவை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோக்கள் மூலம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 74 பேர் காயமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நேற்றைய தினத்தில் மது போதையில் வாகனம் செலுத்திய 758 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கையெடுக்கவுள்ளனர்.