July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு இந்தியாவின் ஏவுகணை எதிர்ப்பு கப்பல் இலங்கை வருகிறது

BAY OF BENGAL (April 14, 2012) - Indian navy guided-missile destroyer INS Ranvijay (D55) steams in formation during Exercise Malabar 2012. U.S. Navy Carrier Strike Group (CSG) 1 is participating in the annual bi-lateral naval field training exercise with the Indian navy to advance multinational maritime relationships and mutual security issues. (U.S. Navy photo by Mass Communication Specialist Seaman George M. Bell)

இந்தியாவின் ஏவுகணை எதிர்ப்பு கப்பலான ஐந்தாவது ராஜ்புத் வகை நாசகாரி ஐ.என்.எஸ்.ரன்விஜய் கப்பல் நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு புதுவருட தினமான 14 ஆம் திகதி கொழும்புக்கு வருகை தரவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

நீர் மூழ்கி எதிர்ப்பு வசதியினை கொண்டிருக்கும் இந்த ஏவுகணை எதிர்ப்பு கப்பலானது சுதேசிய முறையில் சுயமாக தயாரிக்கப்பட்ட பிரமோஸ் சுப்பர் சொனிக் ஏவுகணை வசதிகளையும் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம்,இப்புனிதமான “புதுவருட” கொண்டாட்டங்கள் நடைபெறும் தருணத்தில் இலங்கை மக்களுக்கான பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கான வாழ்த்துக்களுடன் கூட்டொருமைப்பாடு மற்றும் ஐக்கியம் ஆகிய செய்தியினையும் குறித்து நிற்பதாக குறித்த இந்திய கடற்படைக் கப்பலின் வருகை அமைகின்றது என்றும் தெரிவித்துள்ளது.

16 ஆம் திகதிவரை கொழும்பில் தரித்து நிற்கும் இந்த கப்பலின் கப்டன் நாராயணன் ஹரிஹரன் மேற்கு கடற்பிராந்திய கட்டளை தளபதியை சந்திக்கவுள்ளதுடன், ஏப்ரல் 15 ஆம் திகதி இலங்கையிலுள்ள இந்திய அமைதிப்படையினரின் நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்.பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகளில் இலங்கையும் இந்தியாவும் மிகவும் நெருக்கமான ஒத்துழைப்பினை பாரம்பரிய ரீதியாக பகிர்ந்து வருகின்றன.பயிற்சி மற்றும் ஆளுமை விருத்தி செயற்பாடுகளில் பரஸ்பரம் நன்மைதரும் வகையில் இரு கடற்படையினரும் ஒத்துழைப்பினை வழங்கி செயற்பட்டு வருகின்றனர்.மிகவும் நெருங்கிய நட்பு நாடுகள் மத்தியில் கடல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பினை விருத்திசெய்யும் செயற்பாடுகளில் மற்றொரு படியாக இந்த கப்பலின் விஜயம் அமைகின்றது எனவும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .