July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

2021 இறுதிவரை ஒரு போத்தல் தேங்காய் எண்ணெய் 450 ரூபாவுக்கே விற்கப்படும்;பந்துல குணவர்த்தன

ஒரு போத்தல் தரமான உள்ளூர் தேங்காய் எண்ணெய்யை 450 ரூபா கட்டுப்பாட்டு விலையில் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் மேலும் கூறுகையில்,

“என்ன மாற்றங்கள் நடந்தாலும், மனித நுகர்வுக்கு ஏற்ற உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தூய தேங்காய் எண்ணெய் ஒரு போத்தல் ரூ. 450 க்கு சதோச மற்றும் கூட்டுறவு கடைகள் ஊடாக இந்த ஆண்டு இறுதி வரை விற்பனை செய்யப்படும்.

இந்த ஆண்டு இறுதி வரை தேங்காய் எண்ணெய்யின் விலையில் எவ்வித அதிகரிப்பும் இருக்காது. இது தொடர்பாக அனைத்து இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்துடனும் பேசி தேங்காய் எண்ணெய்யை ரூ .450 விலையில் எந்த பற்றாக்குறையும் இல்லாமல் வழங்க ஒப்பந்தம் செய்வோம்”என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.