October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சஜித் பிரேமதாசாவால் மாத்திரமே நாட்டை சரியான திசையில் கொண்டு செல்ல முடியும் என்கிறார் ஜே.ஆர்.அரசாங்கத்தின் நிதியமைச்சர்

எதிர்காலத்தில் இந்த நாட்டை சரியான திசையில் கொண்டு செல்லக்கூடிய ஒரே நபர் சஜித் பிரேமதாச மட்டுமே என்று ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நிதியமைச்சரும் திறந்த பொருளாதாரத்தை நாட்டிற்கு அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக இருந்தவருமான ரோனி டி மெல் தெரிவித்துள்ளார்.

ரோனி டி மெல்லின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருடைய இல்லத்துக்கு சென்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ரோனி டி மெல் 1977 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கத்தில் நிதி அமைச்சராக இருந்தவர் என்பதுடன், திறந்த பொருளாதாரத்தை நாட்டிற்கு அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக இருந்தவர். மேலும், 11 வரவு -செலவுத் திட்டங்களை முன்வைத்துள்ள இவர், நாட்டில் பிராந்திய மேம்பாட்டு வங்கிகளை நிறுவுவதில் முன்னோடியாகவும் விளங்கியவர்.

இதன்போது,சமகால அரசியல் நிலைமை குறித்து கருத்து தெரிவித்த ரோனி டி மெல்,

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசாவின் பங்களிப்பை பாராட்டியதுடன், எதிர்காலத்தில் இந்த நாட்டை சரியான திசையில் கொண்டு செல்லக்கூடிய ஒரே நபர் சஜித் பிரேமதாச மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார்.