July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மே மாதத்தில் கொரோனாவின் 3 வது அலை; எதிர்கொள்ள இலங்கை தயாராக வேண்டும்’

பண்டிகை காலத்தை முன்னிட்டு கொரோனா தொற்றுக்கு எதிரான சுகாதார வழிகாட்டுதல்களை பொது மக்கள் பின்பற்ற தவறியுள்ள நிலையில், மே மாதத்தில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை இலங்கையைத் தாக்கும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை சுகாதார பரிசோதகர் சங்கத்தினால் பல முறை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் பொது மக்கள் அதனை பொருட்படுத்தாது தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மே மாதத்திலிருந்து தோன்றும் புதிய கொரோனா கொத்தணிகளை சமாளிக்க அதிகாரிகள் இப்போதிருந்தே மருத்துவமனைகளை தயார் செய்ய வேண்டும் என்றும் சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய கூறினார்.

திருமதி இலங்கை சர்ச்சை, சுற்றுச்சூழல் பிரச்சினை மற்றும் நஞ்சு பொருள் அடங்கிய எண்ணெய் பிரச்சினை ஆகியவற்றின் பின்னணியில் அதிகரித்து வரும் மிக தீவிரமான கொரோனா வைரஸ் பிரச்சினை மறைக்கப்பட்டு விட்டதாக மகேந்திர பாலசூரிய டெய்லி மிரரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் விளைவாக கொரோனா வைரஸ் தற்போது இல்லை என்ற எண்ணத்தில் பொதுமக்களும் செயற்படுவதாகவும் ஏற்கனவே கொரோனா குறித்து மக்களிடம் இருந்த அச்சத்தை மீண்டும் ஏற்படுத்துவது கடினம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலைமை மிகவும் துரதிர்ஷ்டவசமானது என குறிப்பிட்ட அவர் மூன்றாவது அலை நம்மைத் தாக்கும் போது மட்டுமே இது எவ்வளவு தீவிரமானது என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள்.

எனினும் இப்போது காலம் கடந்துவிட்டது, ஏற்பட போகும் விளைவுகளை சந்தித்து அதை சமாளிக்க தயாராக வேண்டும். அத்தோடு இந்த நிலைமைக்கு பொது மக்களும் அதிகாரிகளுமே பொறுப்பு என்றார்.

தடுப்பூசி போட்டுக்கொள்வதால் கொரோனாவிலிருந்து 100 சதவீத பாதுகாப்பு கிடைப்பதாக மக்கள் கருதுகிறார்கள். ஆனால் உலக நாடுகளில் பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட போதிலும் 3 வது மற்றும் 4 வது அலைகள் ஏற்பட்டுள்ளன. இதன் விளைவாக புதிய பூட்டுதல்கள் செயல்படுத்தப்படுகின்றன என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.