May 29, 2025 20:08:26

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் நிலவரம் தொடர்பில் ஆராய்வதற்காக இராணுவத் தளபதி யாழ்ப்பாணத்திற்கு பயணம்

Shavendra-Silva-

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

கொவிட் நிலைமைகள் தொடர்பாக ஆராயும் வகையிலேயே அவர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். மாவட்டத்தில் தற்போது அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், கொவிட் தடுப்புக்கான தேசிய செயலணியின் பிரதானி என்ற வகையில் இராணுவத் தளபதி அங்கு சென்று நிலைமைகளை ஆராயவுள்ளார்.

இதன்போது பல்வேறு தரப்பினருடன் நிலைமை குறித்து அவர் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை யாழ். மாவட்டத்தின் பாதுகாப்பு குறித்தும் இராணுவத் தளபதி அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.