July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் வீடு புகுந்த கொள்ளைக் கும்பலின் துன்புறுத்தலுக்கு இலக்கான வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

File Photo

யாழ்ப்பாணம், தென்மராட்சி – அல்லாரையில் நேற்று இரவு வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பலொன்றின் துன்புறுத்தலுக்கு இலக்காகி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வயோதிபத் தம்பதி வசிக்கும் குறித்த வீட்டுக்குள் புகுந்துள்ள மூவர் கொண்ட கொள்ளைக் கும்பல் அவர்கள் இருவரையும் கட்டிவைத்து துன்புறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்போது, கயிற்றால் கழுத்தை நெரித்ததில் 72 வயதுடைய சிவராசா என்பவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை கொள்ளையர்கள் வீட்டிலிருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.