October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நுகேகொடை வர்த்தக கட்டடத் தொகுதி தீப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டது!

நுகேகொடை நகரில் உள்ள 5 மாடிகளைக் கொண்ட வர்த்தக கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தீப்பரவலை கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக தீயணைப்பு சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுகேகொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.