July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘உயிரிழந்ததாகக் கூறி பிண அறைக்கு அனுப்பப்பட்ட நோயாளி உயிருடன்’- நீர்கொழும்பில் சம்பவம்

நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறி, பிண அறைக்கு அனுப்பப்பட்ட பின்னர் உயிருடன் திரும்பியுள்ளார்.

பிரதேச மீனவர் ஒருவர் நீர்கொழும்பு மாவட்ட மருத்துவமனையின் வெளி நோயாளர் சிகிச்சைப் பிரிவுக்கு அனுமதிக்கப்பட்டபோது, உயிரிழந்ததாகக் கூறி பிண அறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நபரைப் பார்க்க மருத்துமனை பிண அறைக்கு உறவினர்கள் வருகை தந்தபோது, நோயாளி உயிரிழக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

புலன் மரத்த நிலையில் (கோமா) அனுமதிக்கப்பட்ட நோயாளியை வெளி நோயாளர் பிரிவு, உயிரிழந்ததாக அறிவித்துள்ளது.

குறித்த நோயாளிக்கு குறை நீரிழிவு நோய் காரணமாக புலன் மரத்த நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நோயாளியை உயிரிழந்ததாக அறிவித்த மருத்துவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.