February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிஐடியின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரோஹான் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்

இலங்கையின் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரோஹான் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சொய்சா உடன் அமுலுக்கு வரும் வகையில் இடம்மாற்றப்பட்டதைத் தொடர்ந்தே, புதிய பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சொய்சா, கொழும்பு குற்றவியல் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் இந்த இடம்மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.