June 15, 2025 17:26:55

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புற்றுநோய் இரசாயனம் அடங்கிய எண்ணெய் குறித்த விசாரணைக்கு சீஐடியினால் சிறப்புக் குழு அமைப்பு!

புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுப் பதார்த்தம் அடங்கியுள்ளதாக அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட  தேங்காய் எண்ணெய் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் சிறப்புக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளரும், சட்டத்தரணியுமான நிஷாரா ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளரால் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் 10 பேரைக் கொண்டதாக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.