July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உயர்தர, புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு!

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, உயர்தரப் பரீட்சையை ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையை  ஒக்டோபர் 3 ஆம் திகதி நடத்துவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த வருடத்திற்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை அடுத்த வருட ஜனவரி இறுதி வாரத்தில் நடத்தவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளிலும் முதலாம் தவணை விடுமுறை இன்று முதல் வழங்கப்படவுள்ளது.  இதன்படி இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.