October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் இருந்து கடல் வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 20 பேர் கைது!

Photo: https://www.navy.lk/

இலங்கையில் இருந்து சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முற்பட்ட 20 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறை – கொண்டச்சிக்குடா பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கொண்டச்சிக்குடா பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட வீதிச் சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைதாகியுள்ளனர்.

அந்த பகுதியில் பயணித்த சந்தேகத்திற்கிடமான நான்கு ஆட்டோக்களை சோதனையிட்ட போது, அதில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த 20 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், இவ்வேளையில் தாம் படகு மூலம் வெளிநாட்டுக்கு செல்லும் நோக்கில் சிலாவத்துறை கடற்கரையை நோக்கி பயணிப்பதாக தகவல்கள் வெளியானதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் அனைவரையும் கைது செய்து சிலவாத்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கையெடுத்துள்ளதாக கடற்படையினர் கூறியுள்ளனர்.

கைதானவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், புத்தளம், வாழைச்சேனை மற்றும் வத்தளை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.