July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாணவர்களுக்கு அடிப்படைவாதத்தை போதித்ததாக ஒலுவில் பிரதேசத்தில் இருவர் கைது!

பாடசாலை மாணவர்களுக்கு அடிப்படைவாதத்தை போதித்ததாக தெரிவித்து அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் பிரதேசத்தில் இரண்டு பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2018 ஆம் ஆண்டில் ஒலுவில் பிரதேசத்தில் க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கு சந்தேக நபர்கள் இருவரும் அடிப்படைவாதத்தை போதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அடிப்படைவாத போதனையை நடத்தும் போது, மாணவர்கள் மீது இவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி விசாரணைகளை நடத்திய பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் 30 மற்றும் 39 வயதுடைய இருவரை நேற்று இரவு கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இருவரும், கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.