July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘யாழ். மாநகர காவல் படை’ விவகாரம் தொடர்பில் பொலிஸார் பல மணிநேரம் விசாரணை

யாழ்ப்பாணம் மாநகரசபையால் அமைக்கப்பட்ட காவல் படை தொடர்பில் மாநகர ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பொலிஸார் பல மணிநேரம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
காவலாளி சேவையை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும் என்ற நிலையில், காவல் படை என்ற பெயரில் அரச துறையில் ஐவரை கடமைக்கு அமர்த்தியமை தொடர்பில் இந்த விசாரணை முன்னெடுக்கப்படுவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், யாழ் மாநகர காவல் படையினர் விடுதலைப் புலிகளின் தமிழீழ காவல்துறையின் சீருடையின் நிறத்தை ஒத்த சீருடையை அணிந்துள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் கடமைக்கு அமர்த்தப்பட்ட ஐவரையும் வாக்குமூலம் வழங்க வருமாறு பொலிஸாரால் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணனும் இன்று மாலை பொலிஸ் நிலையத்துக்கு சென்றிருந்தார்.
குறித்த விசாரணைகள் தொடர்பில் பொலிஸாரின் தகவலை உடனடியாக பெற்றுக்கொள்ள முடியவில்லை.
யாழ்ப்பாணம் மாநகரின் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5 ஆயிரம் ரூபாயும், வெற்றிலை எச்சில் துப்பினால் 2 ஆயிரம் ரூபாயும் தண்டப் பணம் அறவிடப்படவுள்ளதாக  மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் இன்று மாலை அறிவித்திருந்தார்.
இந்த நடைமுறையை  கையாள்வதற்காக யாழ்ப்பாணம் மாநகர காவல் படை உருவாக்கட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.