![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/04/116288568_2686471778234806_5228069143241287767_n-e1617794993485.jpg?fit=1024%2C672&ssl=1)
இலங்கையில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளையும் மறைப்பதற்காக அரசாங்கம் மக்களை திசை திருப்ப முயற்சிப்பதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.
தற்போது, அரசாங்கம் திடீரென்று ரஞ்சன் ராமநாயக்க மீது அனுதாபம் காட்ட ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்கள் புத்தாண்டைக் கொண்டாட முடியாத நிலையில் இருக்கின்ற போதே, அரசாங்கம் இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் ஹேஷா விதானகே சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் மூன்று நேர சாப்பாட்டுக்கு வழியின்றி துன்புறுவதை மறைப்பதற்காக அரசாங்கம் ரஞ்சன் ராமநாயக்கவின் விடயத்தைக் கையில் எடுத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அரசாங்கம் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை ரஞ்சனைக் கொண்டு மறைத்துக்கொள்ள முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சி உறுப்பினர் தெரிவித்துள்ளார்.