July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கை 800 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறமுடியும்’

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கை 800 மில்லியன் அமெரிக்க டொலர் இருப்புக்களைப் பெற முடியும் என்று இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் புதிய ஒதுக்கீடுகளுக்கு இலங்கை தகுதியுள்ள நாடாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகியன கொரோனாவைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள உலக பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து மீள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நெருக்கடி நிலைமையில் இருந்து மீள்வதற்கு உறுப்பு நாடுகளிடம் இருந்து பெறப்பட்ட கடன்களில் இருந்து ஒரு நிதியம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கப்ரால் பரிந்துரைத்துள்ளார்.