July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏப்ரல் முதல் ஆயிரம் ரூபா சம்பளம் கிடைக்கும்”

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் ஏப்ரல் மாதத்தில் முதல் தடவையாக கிடைக்கும் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

சகல பெருந்தோட்ட கம்பனிகளும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்க கடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பெருந்தோட்ட கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை. எனினும் அரசாங்கத்தின் கொள்கையை நடைமுறைப்படுத்தும் நோக்கில் சம்பள நிர்ணய சபையின் மூலமாக தீர்மானம் ஒன்றினை எடுத்துள்ளோம் எனக் கூறினார்.

பெருந்தோட்ட கம்பனிகள் வழக்கு தொடுத்திருந்த போதிலும் நேற்று எமக்கு சாதகமான தீர்ப்பு ஒன்று கிடைக்கப்பெற்றது. சம்பள விடயங்களை முன்னெடுத்து செல்லக்கூடிய அனுமதியை எமக்கு நீதிமன்றம் பெற்றுக்கொடுத்துள்ளது என்றார்.

இது அரசங்கத்திற்கு கிடைத்த பாரிய வெற்றியாகும். சகல பெருந்தோட்ட கம்பனிகளும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க வேண்டிய கடப்பாட்டை கொண்டுள்ளது எனவும் அவர் கூறினார்.