February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா அச்சத்தால் இலங்கையில் இரு பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்!

கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய மற்றும் மினுவாங்கொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரையில் இந்த பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

திவுலப்பிட்டிய பிரதேசத்தில் கொரோனா தொற்றுடன் பெண்ணொருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே ஊரடங்கு அமுலாகியுள்ளது.

இந்தப் பெண்ணுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது கண்டறியப்படாத நிலையில், அங்கு மேலும் தொற்றாளர்கள் இருக்கலாம் என்ற அச்சம் காரணமாக அவர்களை அடையாளம் காண அதிகாரிகள் நடவடிக்கையெடுத்து வருகின்றனர்.