July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொலனறுவை பகமுன பகுதியில் வெடிபொருட்களுடன் நால்வர் கைது!

அனுமதிப்பத்திரம் இன்றி பெருந்தொகையான வெடிபொருட்களை கொண்டுச் சென்ற நான்கு சந்தேகநபர்கள் பொலனறுவை மாவட்டத்தில் பகமுன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாவுல, எலஹெர வீதியில் சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்ட போது இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

3.230 கிலோ கிராம் அமோனியா, 135 வோடர் ஜெல் குச்சிகள், 20 கிராம் வெடி மருந்து, 14 டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அவிசாவளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது  தொடர்பான விசாரணைகளை நாவுல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.