July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய மீனவர்களை அனுமதித்தால் பாரிய போராட்டம்; இலங்கை மீனவர் சங்கம் எச்சரிக்கை

Fishery Boats Common Image

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்படுமாயின் கடும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என அகில இலங்கை மீனவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

அதேநேரம்,இந்திய மீனவர்கள் எங்கள் கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்டால் உள்நாட்டு மீனவர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் எனவும் அச்சங்கத்தின் தலைவர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.

நாட்டின் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்களை மீன்பிடியில் ஈடுபடுவதற்கான அனுமதியை வழங்குவதற்காக சிலர் முயற்சித்து வருகின்றார்கள்.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு எமது சங்கம் கடும் எதிர்ப்பினை வெளியிடும் என்பதோடு, பாரிய போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் ரத்ன கமகே குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மீனவர்கள் நாட்டுப்படகுடன் இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்தால் அவர்களை பதிந்துவிட்டு அனுமதிப்பது தொடர்பில் பரிசீலித்து வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்றையதினம் ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.