June 16, 2025 11:35:49

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட பஸ், ரயில் சேவைகள்; இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொது மக்களுக்கான போக்குவரத்து வசதிகளை அதிகரிக்கும் நோக்கில் விசேட பஸ், ரயில்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதற்கான நேர அட்டவணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி போக்குவரத்து சேவைகளை மேற்கொள்வது போக்குவரத்து அமைச்சின் பொறுப்பாகும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை போக்குவரத்து அதிகார சபை, ரயில்வே திணைக்களம், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆகியன இணைந்து இந்த விசேட போக்குவரத்து வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.

இதேவேளை, பண்டிகைக் காலத்தின் போது, போக்குவரத்து மட்டுப்படுத்தப்படமாட்டாது என்று சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.