July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் பொலிஸ் உத்தியோகத்தரின் விரலைக் கடித்த இளைஞன் கைது!

யாழ்ப்பாணத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கை விரலைக் கடித்து, காயப்படுத்தியதாக குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவனை யாழ்.பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ். ஆரியகுளம் சந்தியில் அமைந்துள்ள நாக விகாரையில் இரவுக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கும் அங்கு பணிபுரிந்த இளைஞனுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு, பின்னர் கைகலப்பாக மாறியதால், பொலிஸ் உத்தியோகத்தரின் கை விரலை இளைஞன் கடித்ததாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

காயத்துக்குள்ளான பொலிஸ் அதிகாரி யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், விரலை கடித்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.