July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் 20 பேர் காயம்’

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மில்லெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மாத்தறைக்குச் செல்லும் பஸ் ஒன்று லொறியின் பின்புறத்தில் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தின் போது, லொறி கவிழ்ந்து பஸ்ஸின் மேல் விழுந்ததால், பஸ்ஸில் இருந்தவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 10 வாகன விபத்துகளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய, 5 பாதசாரிகளும் முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் லொறியில் பயணித்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.