July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இனந்தெரியாதோரால் தாக்கப்பட்ட சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் யோகேஸ்வரன் யாழ். மருத்துவமனையில் அனுமதி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் இராமநாதன் யோகேஸ்வரன் இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு உள்ளாகி, படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாவற்குழியில் 300 வீட்டுத் திட்டம் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்று தொடர்பிலான சமரச முயற்சிக்கு சென்றபோதே, இராமநாதன் யோகேஸ்வரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கத்தியால் வெட்டிப் படுகாயம் அடைந்த யோகேஸ்வரன் மீது கற்களாலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியைச் சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட வெவ்வேறு திருட்டும் சம்பவங்களை உடனடியாக முறிடியத்த நடவடிக்கைக்கு பிரதேச சபை உறுப்பினர் யோகேஸ்வரன் தலைமை தாங்கியுள்ளார்.

திருட்டு சம்பவங்கள் தொடர்பில் குறித்த பகுதியைச் சேர்ந்த சிலரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

300 வீட்டுத்திட்டம் பகுதியில் மோதல் சம்பவம் இடம்பெறுவதாக போலியாகத் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு சென்றவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.