October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இராயப்பு ஜோசப் ஆண்டகையின் உடல் மன்னார் ஆயர் இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டது

மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் உடல் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இருந்து பவனியாக மன்னாருக்கு எடுத்து வரப்பட்டது.

இதன்போது மக்கள் வீதியின் இரு பக்கமும் நின்று ஆயருக்கு அஞ்சலி செலுத்தினர்.
ஆயரின் உடல் தற்போது மன்னார் ஆயர் இல்லத்தில் உள்ள சிற்றாலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஆயரின் உடலுக்கு அரசியல் பிரமுகர்கள் ,அரச அதிகாரிகள் அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள் உற்பட மன்னார் மாவட்டத்தில் உள்ள பொது மக்களும் இணைந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் உடல் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதுடன், திங்கட்கிழமை பிற்பகல் 2 மணி வரை அங்கு அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை மாலை 3 மணி அளவில் பேராலயத்தில் இறுதி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். இதன்போது இலங்கையின் அனைத்து ஆயர்களும் இணைந்து கூட்டுத் திருப்பலியை ஒப்புக் கொடுப்பார்கள்.

இதன்பின்னர் ஆயரின் உடல் பேராலயத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

This slideshow requires JavaScript.