July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தம்புள்ளை பொருளாதார மையத்தில் குவியும் யாழ்.மரக்கறிகள்; மகிழ்ச்சியில் விவசாயிகள்

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளினால் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறி வகைகள், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ளன.

அறுவடை செய்த மரக்கறிகளை சந்தைப்படுத்துவதில் யாழ்.விவசாயிகள் தோல்வியுற்றதையடுத்து, தமது விளைபொருட்களுக்கு தம்புள்ளை பொருளாதார மையம் ஊடாக நியாயமான விலை கிடைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பண்டிகைக் காலம் ஆரம்பித்த நாள் முதல் யாழ்.மாவட்ட விவசாயிகள் தமது மரக்கறிகளை தம்புள்ளை பொருளாதார மையத்திற்கு கொண்டுவர ஆரம்பித்துள்ளனர்.

யாழ்.மரக்கறிகளினால் தம்புள்ளை பொருளாதார மையம் நிரம்பியுள்ளதாக வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.
யாழ்.விவசாயிகளினால் அறுவடை செய்யப்பட்ட பச்சை மிளகாய், குடை மிளகாய், உள்ளூர் உருளைக்கிழங்கு, பீட்ரூட், பூசணிக்காய் மற்றும் சின்ன வெங்காயம் போன்றன கொண்டுவரப்பட்டுள்ளன.

யாழ்.மரக்கறிகள் தம்புள்ளை பொருளாதார மையத்துக்கு தாராளமாக கொண்டுவரப்படுவதால் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ள அதேவேளை,காய்கறிகளை விற்பனை செய்வது எளிதாகியுள்ளதாக தம்புள்ளை பொருளாதார மையத்திற்கு வருகை தரும் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.