July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னார் மாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை காலமானார்

மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை காலமானார்.

நோய்வாய்ப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் திருச்சிலுவை கன்னியர் மட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர் தனது 80 ஆவது வயதில் இன்று காலமானதாக மன்னார் ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.

ஆயரின் இறுதிக்கிரிகைகள் தொடர்பான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவித்துள்ளார்.

1940 ஏப்ரல் 16 ஆம் திகதி யாழ்ப்­பாணம் நெடுந்­தீவில் பிறந்த இராயப்பு ஜோசப், நெடுந்­தீவு றோமன் கத்தோலிக்கக. பாட­சாலை, முருங்கன் மகா வித்­தி­யா­லயம், யாழ். புனித பத்திரி­சியார் கல்­லூரி ஆகி­ய­வற்றில் தனது கல்­வியைத் தொடர்ந்தார்.

கண்டி தேசிய குரு­மடம், திருச்சி புனித பவுல் குரு­மடம் ஆகி­ய­வற்றில் குருத்­துவக் கல்­வியைக் கற்று 1967 ஆம் ஆண்டில் யாழ். மரி­யன்னை பேரா­ல­யத்தில் குரு­வாகத் திருநிலைப்படுத்தப்பட்ட இராயப்பு ஜோசப் 1992 ஆம் ஆண்டில் மன்னார் மறை­மா­வட்­டத்தின் ஆய­ராக நிய­மனம் பெற்றார்.

தொடர்ச்சியாக 25 வருடங்களாக மன்னார் மறைமாவட்ட ஆயராக பணியாற்றிய அவர், யுத்தக் காலத்தில் மக்களுக்கு பெரும் சேவைகளை ஆற்றியுள்ளார்.