July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய மீனவர்களுக்கு வரையறுக்கப்பட்ட அனுமதி வழங்க அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு வரையறுக்கப்பட்ட அனுமதியை வழங்க ஆலோசித்துள்ளதாக கடற்றொழில்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் மாத்திரம் சட்டரீதியான அனுமதிக்கப்பட்ட மீன்பிடி முறைமைகளைப் பயன்படுத்தி இந்திய மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு வழங்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

இவ்வாறு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அனுமதிக்கப்படும் பட்சத்தில் அவர்களிடம் ஒரு தொகை கட்டணமாக அறவிடப்பட்டு,அந்த தொகை இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படும்.

தமிழக மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளை ராஜதந்திர ரீதியாக தீர்த்துக் கொள்ளும் நோக்கில் இந்த ஆலோசனையை அமைச்சரவையில் முன்வைத்து செயற்படுத்த முயற்சிக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.