June 14, 2025 22:15:54

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழ்- சிங்கள புத்தாண்டை பலகாரங்களுடன் கொண்டாட முடியாத நிலை’; விலைவாசி அதிகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

விலைவாசி அதிகரிப்புக்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மருதானை பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், ‘அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் இம்முறை தமிழ், சிங்கள புத்தாண்டை பலகாரங்களுடன் கொண்டாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது’ என்று கூறினார்.