![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/03/WhatsApp-Image-2021-03-31-at-15.40.28.jpeg?fit=1024%2C576&ssl=1)
சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்க மீது தாக்கல் செய்திருந்த வழக்கொன்றை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய கருத்தொன்று தொடர்பில் அமைச்சர் மகிந்தானந்த, நுகோகொட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அவதூறு வழக்கொன்றையே இவ்வாறு வாபஸ் பெற்றுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் மூலம் தான் அரசியல் ரீதியாகப் பழிவாங்கப்பட்டாலும், அதனையே பதிலுக்குச் செய்ய எதிர்பார்ப்பதில்லை என்று மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
‘ரஞ்சன் ராமநாயக்க ஒரு அப்பாவி, அவர் தவறாக வழிநடத்தப்பட்டு, ஏனையவர்களால் பயன்படுத்தப்பட்டார்’ என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதியை நிலைநாட்ட, தனிநபர் பிரேரணையொன்றைக் கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.