October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அரசாங்கத்தை வெளிப்படையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’

யுவானைப் பயன்படுத்தி சீனாவிடமிருந்து பெற்ற சில கடன்களை திருப்பிச் செலுத்த முடியும் என்று அரசாங்கம் உறுதியளித்திருந்தாலும், இந்த கடன்களின் விலைப்பட்டியல் டொலர்களில் எழுதப்பட்டுள்ளதால் டொலரிலேயே அரசாங்கம் செலுத்த வேண்டியிருக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா தெரிவித்துள்ளார்.

“நாட்டில் டொலரின் பெறுமதி உயர்வடைந்து வருவதால் அரசாங்கத்தால் அத்தகைய கடன்களை செலுத்தக்கூடிய வாய்ப்பு அரிதாகவே உள்ளது.இந்நிலையில் யுவானில் கடன்களை செலுத்த முடியும் என்று அரசாங்கம் கூறி,அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க முயற்சிக்கிறது. இவை நடைமுறை தீர்வுகள் அல்ல.

எனவே அரசாங்கத்தை வெளிப்படையாக இருக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.