June 15, 2025 19:45:56

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தங்கொட்டுவ பகுதியில் சந்தேகத்திற்கிடமான தேங்காய் எண்ணெய் பவுசர்கள் கைப்பற்றப்பட்டன

தங்கொட்டுவ பகுதியில், சந்தேகத்திற்கு இடமான 27,500 லீட்டர் தேங்காய் எண்ணெய்யுடன் இரண்டு பவுசர் லொறிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய்யாக இது இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து தங்கொட்டுவையில் உள்ள எண்ணெய் ஆலைக்கு அருகில் லொறிகள் நிறுத்தப்பட்டிருந்தபோது கைப்பற்றப்பட்டுள்ளன.

மார்ச் 25 ஆம் திகதி ராகமையில் உள்ள தேங்காய் எண்ணெய் களஞ்சியசாலையிலிருந்து இந்த எண்ணெய் கொண்டு வரப்பட்டதாக அவர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த கொள்கலனில் உள்ள எண்ணெய் மாதிரிகள் அரச ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.