July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரிகள் உட்பட 34 பேர் கைது’

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உட்பட 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவினர் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 20 பொலிஸ் அதிகாரிகளும் 14 பிரஜைகளும் அடங்குவதாக குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இதில், காவல்துறை சிறப்பு பணிக்குழுவின் அதிகாரி மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் உயர் அதிகாரி உட்பட ஐந்து பொலிஸ் அதிகாரிகளும் ஒன்பது பிரஜைகளும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள முக்கிய இரு குற்றவாளிகளான உதார சம்பத் மற்றும் படோவிட்ட லொகு ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான பிடியாணையை நீதிமன்ற உத்தரவின் பேரில் சர்வதேச பொலிஸாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேலும் கூறியுள்ளனர்.