July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேவை இன்னும் மக்களுக்கு உள்ளது’: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேவை இன்னும் மக்கள் மத்தியில் இருப்பதால், கட்சியை மேலும் பலம்மிக்கதாக முன்னோக்கிக் கொண்டுசெல்வதற்கு எதிர்பார்ப்பதாக அந்தக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

திறமையான இளைஞர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தொடர்ந்தும் இணைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது தமது கட்சிக்கு பொதுமக்கள் ஆதரவு பெருகி வருகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘நாட்டின் எதிர்கால அபிவிருத்தியைத் திட்டமிடும் போது, வறுமை ஒழிக்கும் வேலைத்திட்டம் முதன்மை பெற வேண்டும். அதுவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கையாகும்’ என்றும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.